Bhushavali
Pooch Cafe by Paul Gilligan

சிறு திண்பண்டத்தை காட்டி, 
அதன் மீது ஆர்வம் கொண்ட என்னை 
பிடித்திழுத்து, 
சிரசத்தை நீரினுள் புதைத்து, 
சுவாசம் நின்றதும், 
வெளி கொணர்ந்து, 
சிரசத்தையும், கைகளையும், கால்களையும் வெட்டி, 
முண்டமாகி நின்ற என்னை, 
உடல் சுட்டெரிக்கும் எண்ணையில் இட்டு, 
உடன் கூடே சில பதார்த்தங்களையும் போட்டு, 
ஐயகோ.....!!! 

மனம் வலித்து, 
உயிர் பிரிந்து, 
உடல் ரணமாகி, 
இருந்த என்னை


உண்டு களித்தது... அந்த மீன்...!!!



Siru thinpandaththai kaatti,
Adhan miidhu aarvam konda ennai 
Pidiththizhuththu, 
Sirasaththai niirinul pudhaiththu, 
Swaasam nindradhum, 
Veli konarndhu, 
Sirasaththaiyum, kaikalaiyum, kaalgalaiyum vetti, 
Mundamaagi nindra ennai, 
Udal sutterikkum ennaiyil ittu, 
Udan kuude sila padhaarththanggalaiyum pottu, 
Aiyagoo.....!!! 

Manam valiththu, 
Uyir pirindhu, 
Udal ranamaagi, 
Irundha ennai 


Undu kaliththadhu... andha meen...!!!
Bhushavali
நீ எத்தனை நாட்களாய் காத்திருந்தாய்...??? 
உன் காத்திருப்பு இன்று முடிந்ததடா... 
உன் எண்ணங்கள் இன்று நிறைவேறியதடா... 
உன் நிம்மதி பிறந்ததடா...

எனக்கோ, 
மனம் நோகி..
உயிர் வெதும்பி.. 
நிம்மதி குலைந்து... 

வயிற்றினுள் நுழைந்த பிரேதத்தோடு 
பிரேதமாய் நானும்....


Nee eththanai naatkalaay kaaththirundhaay...??? 
Un kaaththiruppu indru mudindhadhadaa... 
Un ennanggal indru niraiveeriyadhadaa... 
Un nimmadhi pirandhadhadaa...

Enakkoo, 
Manam nogi.. 
Uyir vedhumbi.. 
Nimmadhi kulaindhu... 

Vayitrinul nuzhaindha predhaththodu 
Predhamaay naanum....
Bhushavali
When death tears me apart
I am relieved, glad and happy.....
My wounds are now gone
And from my sorrows, now am free.....

I was so lost, I was in pain,
I never wanted to go through this again.....
Now I feel relieved
I leave behind every thorn that pierced my vein.....

So deep in my heart
It pierced and pricked so bad...
Now it doesn't hurt
As I go away from it all, far apart....

I was so alone, so lonely,
I felt why life had this much agony.....
Now I smile, now am free
As death embraces me finally...
Bhushavali
அரவிந்தா,
நீ அன்று என்னைச் சாடினாய், ஏற்றுக்கொண்டேன்.
உனக்கு உரிமைகள் உண்டு.
அது என்னையும் பாதிக்கவில்லை
அந்நொடியில் உன் மனத் ததும்பல்களை நானறிவேன்.
உன்னை மறந்து, என் திசை நோக்கிச் சென்றேன்.

சற்றே சமயத்தினுள் , நீ என்னை அழைத்தாய்.
மன்னிப்பு கோரினாய்.
ஒரு நிமிடம் அதிசயித்தேன்.
அதிசயமா, அபூர்வமா - அது யாதென்றறியேன்.
நீ கூறியிருக்க வேண்டிய அவசியமும் உனக்கில்லை.
நானும் அதை எதிர்ப்பார்க்கவில்லை.

அத்தொடு உன்னை மறந்திருப்பேன்.
அந்த ஒரு வார்த்தையால்,
இன்றும் உன்னை நினைவு கோருகிறேன்.
உன் நலம் வேண்டுகிறேன்.


Aravindhaa,
Nee andru ennai chaadinaay, Etrukkonden.
unakku urimaigal undu.
adhu ennaiyum baadhikkavillai
annodiyil un manath thadhumbalgalai naanariven.
unnai marawdhu, en dhisai nokki chendren.

chatre samayaththinul , nee ennai azhaiththaay.
mannippu korinaay.
oru nimidam adhisayiththen.
adhisayamaa, abuurvamaa - adhu yaadhendrariyen.
nee kooriyirukka veendiya avasiyamum unakkillai.
naanum adhai edhirppaarkkavillai.

aththodu unnai marandhiruppen.
andha oru vaarththayaal,
indrum unnai ninaivu koorugiren.
un nalam vendugiren.
Bhushavali
6 வருடங்களுக்கு முன்பு சந்தித்த நண்பர் கிரீஷுக்கு சமர்ப்பணம்
Dedicated to my dear friend Girish whom I last met before 6 yrs.

பழைய நினைவுகள் மீண்டும் மலர்கின்றன,
புதிய புகைப்படஙள் சிலவற்றை கிளரினால்...
முகச்சாயல்களில் சில மாற்றங்கள்,
அகத்தினுள் நிற்பதோ அதே தோழமை...


pazhaya ninaivugal meendum malargindrana,
pudhiya pugaippadangal silavattrai kilarinaal...
mugachchayalgalil sila maatrangal,
agathinul nirpodo adhe thozhamai...

Bhushavali
சென்னை மாநகரப் பேருந்து. 
அரிது அரிது அப்பேருந்தில் அமர இடம் கிடத்தல் அரிது. 
இருப்பினும் அன்று கிடைத்தது... 

சில நிமிடஙளில் செவிகளில் நிறைந்தது, 
சிறு பிள்ளையின் அரைக்கூவல் 
அங்கு நோக்கினால், 
விழிகளில் நீர் நிரைந்து அழுதபடி, 
ஒரு செண்பகமலர்.. 
அந்த செங்காந்தள் மங்கைக்கோ, 
நெரிசலில் செண்பகமலருடன் ஒரு போராட்டம்.. 

சற்று நேரத்தில், மூதாட்டி ஒருத்தி,
தள்ளாத வயதில் மக்கள் தோளின்றி
தனியெ ஒரு போராட்டம்... 

என் மனதிலோ, 
அதனினும் பெரிய போரட்டம், 
நான் எழுந்து இடம் தரவா.? 
இல்லை நெஞ்சைப் பிடித்தபடி அமர்ந்திருக்கவா.? 

எழுந்து இடம் தராவிட்டால் நான் கல் நெஞ்சக்காரியா.? 
எழுந்து இடம் தந்தால், 
நான் ஜனத்தொகை பெருக்கதிற்கு வழி கோல்கிறேனா.? 
பெற்ற தாயை கவனிக்கத் தவறிய மாக்களுக்கு தோள் கொடுக்கிறேனா.? 

தினம் தினம் மனதில் கேள்விக்குறி....

Chennai maanagarap peerundhu.

Aridhu aridhu apperundhil amara idam kidaiththal aridhu.

Iruppinum andru kidaithadhu...


Sila nimidangalil sevigalil niraindhadhu,

Siru pillaiyin araikuuval

Angu nokkinaal,

Vizhigalil niir niraindhu azhudhapadi,

Oru chenbagamalar..

Andha sengandhal mangaiko,

Nerisalil chenbagamalarudan oru porattam..


Satru neeraththil, Moodhaatti oruththi,

Thallaadha vayadhil makkal tholindri,

Thaniye oru poraattam...


En manadhiloo, adhaninum periya porattam,

Naan ezhundhu idam tharavaa.?

Illai nenjchai pidithapadi amarndhirukkavaa.?

Ezhundhu idam tharaavittaal naan kal nenjchakkaariyaa.?

Ezhundhu idam thandhaal,

Naan janaththogai perukkathirku vazhi koolgirenaa.?

Petra thaayai gavanikkath thavariya maakkalukku thol kodukkirenaa.?

Dhinam dhinam manadhil kelvikkuri....

Bhushavali
நண்பர் ஸ்ரீனிவாசனின் தந்தைக்கு சமர்ப்பணம்:
Dedicated to Mr. Srinivan's dad:

சாமி, 
உன் தந்தை அப்பாசாமி... 
உன் தந்தைக்கோ நீயே அப்பா, சாமி.
உன்னைச் சான்றோன் எனக் கேட்ட உன் அப்பா, 
உன் உணர்வில், உயிரில், என்றும் நிலைக்கும் சாமி...

Saami,
Un thandhai appasaami,
Un thandahikko neeye appa, saami.
Unnai chaandron ena ketta un appa,
Un unarvil, uyril endrum nilaikkum Saami...