Showing posts with label உணர்வுகள் - Emotional Fluctuations. Show all posts
Showing posts with label உணர்வுகள் - Emotional Fluctuations. Show all posts
Bhushavali
நீ இல்லாமல் நான்கு நாட்கள்
மூன்று நாட்களை ஒரு வழியாக தாட்டிவிட்டேன்
நான்காம் நாள்
வயிறு பிசைந்தது…
நெஞ்சு வலித்தது…
மூளை கிட்டத்தட்ட செயலிழந்தது…
கண்கள் உன்னைத் தேடின…
உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது…
நிலை குலைந்திருக்கும் நான்,
உன் குரல் கேட்டால் -
நிலை தெளிவேன்...

Nee illamal naangu naatkal

Moondru naatkalai oru vazhiyaaga thaattivitten

Naangam naal

Vayiru pisaindhadhu…

Nenju valithadhu…

Moolai kittathatta seyalizhandhadhu…

Kangal unnai thedina…

Uyir oosaladikkondirukkiradhu…

Nilai kulaindhirukkum naan,

Un kural kettal -

Nilai theliven

Bhushavali
When some question are un-warrantedly asked,
When a moment wrongly hanppens,
When some answers had to be given,
When some results turn haywire,
When some people do not see you correctly,
When the question is 'What did you do'.?
When you are hurt by all around you,
When you want to cry your heart out,
When you are not recognized for what you are,
When even the pen you write stops working,
What do you do.?????
Bhushavali
உன்னால் தொலைத்த ரௌத்திரத்தை
உன் பிரிவால் மீண்டும் கண்டெடுத்தேன்.
இது நன்மையோ தீமையோ நானறியேன்.

இதோ இந்நொடியில்
ரௌத்திரம் மேலோங்கிட
செவிகளில் ரௌத்திர சப்தங்கள் ஒலிக்க
கைகளில் ரௌத்திரமேற்றும் ருத்திராட்சங்கள் இருக்க
அருகில் தண்டால் எடுக்கும் உபகரணங்களுடன்
கண்டெடுத்த ரௌத்திரம் விழிகளில் மின்ன
அனல் மூச்சுடன் அமர்ந்திருக்கிறேன்.


Unnaal tholaiththa rauthirathai
Un pirivaal mindum kandeduththen.
Idhu nanmaiyo thiimaiyo naanariyen.

Idho innodiyil
Rauthiram melonggida
Sevigalil rauthira sapthanggal olikka
Kaigalil rowthirametrum ruththiraatchanggal irukka
Arugil thandaal edukkum upagaranangaludan
kandeduththa rauthiram vizhigalil minna
Anal moochudan amarndhirukkiren.
Bhushavali
வாழ்க்கையில் பற்பல நிகழ்ச்சிகள்... 
நவரசமும் ஒவ்வொன்றாய், 
ஒவ்வொரு நொடியும் எட்டிப்பார்க்கும்...  

என் வாழ்க்கை கலந்திருந்தாலும், 
சிரிப்பிற்கு, 
அழகிய உவமையாய் நின்ற 
அந்நிகழ்ச்சியை, 
நண்பனாய் நின்ற உன்னிடம், 
உன்னை நம்பிக் கூறினேன். 
இதை சிரிப்போடு சிரிப்பாய் 
நீ எவரிடமும் கூறினாலும், 
என் பெயரை கூறமாட்டாய் 
என்ற நம்பிக்கையில்...  

அந்த நம்பிக்கையை ஏன் சீரழித்து 
சின்னாபின்னமாக்கினாய்...??? 
என் பெயரை ஏன் மொழிந்த்தாய்...??? 
என் மன உளைச்சலை,
நீ இப்போதெப்படி களைவாய்..?????


Vaazhkkaiyil parpala nigazhchchigal... 
Navarasamum ovvondraay, 
Ovvoru nodiyum ettippaarkkum...  

En vaazhkkai kalandhirundhaalum, 
Sirippirku, 
Azhagiya uvamaiyaay nindra 
Annigazhchchiyai, 
Nanbanaay nindra unnidam, 
Unnai nambi kurinen. 
Idhai sirippodu sirippaay nii 
Evaridamum kuurinaalum, 
En peyarai kuuramaattaay  
Endra nambikkaiyil...  

Andha nambikkaiyai een siirazhiththu 
Chinnaabinnamaakkinaay...??? 
En peyarai een mozhindhaay...??? 
En mana ulaichchalai, 
Nii ippodheppadi kalaivaay..?????
Bhushavali
உன் குலம் தான் இதுவாயிற்றே, உனக்கென்ன.? 
உன் தந்தை தான் இவராயிற்றே, உனக்கென்ன.? 
உன் தாய் தான் இவராயிற்றே, உனக்கென்ன.? 
உன் வீடு தான் இங்கிருக்கிறதே, உனக்கென்ன.? 
உன் சம்பளம் தான் இவ்வளவாயிற்றே, உனக்கென்ன.?  

நீ கேட்ட இந்த கேள்விகள் அனைத்தையும், 
மனத்தின் ஆழத்தில் தள்ளி பூட்டி விட்டேன். 
இதழோரம் புன்னகை பூத்து விட்டேன்.  

இன்றோ நீ, 
உனக்கு தான் தினமும் நல்ல உணவு கிடைக்கிறதே.? 
உன் உணவு தான் சத்தானதாயிற்றே.? 
இப்படியும் உன்னிடமிருந்து கேள்விகள்.  

இதை ஒரு உணவற்ற ஏழை கேட்டிருந்தால், 
எண்ணங்கள் வெறு திசை சென்றிருக்கும். 
நீ ஏன் கேட்டாய்.?  

மனிதா,
'உணவுக்குக் கூட கண் வைத்தால் 
அது செரிக்குமா.?' - என சிலர் கேட்பர். 
என்னைப் பொருத்த மட்டில், 
என் வயிற்றில், 
அது செரிக்கும், நன்றாகவே செரிக்கும்.  

ஆனால், 
என் மனதிலோ, 
சுற்றமாய் நின்ற நீ, 
நண்பனாய் செரிக்காமல், 
யாரோ ஒரு மனிதனாய் 
உருமாறிவிட்டாய்...


Un kulam dhaan idhuvaayitre, unakkenna.? 
Un thandhai dhaan ivaraayitre, unakkenna.? 
Un thaay dhaan ivaraayitre, unakkenna.? 
Un veedu dhaan ingirukkiradhe, unakkenna.? 
Un sambalam dhaan ivvalavaayitre, unakkenna.?  

Nii ketta indha keelvigaL anaiththaiyum, 
Manathin aazhaththil thalli pootti vitten. 
Idhazhoram punnagai pooththu vitten.  

Indro nii, 
Unakku dhaan dhinamum nalla unavu kidaikkiradhee.? 
Un unavu dhaan saththaanadhaayire.?
Ippadiyum unnidamirundhu kelvigal.  

Idhai oru unavatra ezhai kettirundhaal, 
EnnanggaL veru dhisai sendrirukkum. 
Nii en kettaay.?  

Manidhaa, 
'Unavukku kooda kan vaithaal 
Adhu serikkumaa.?' - ena silar ketpar. 
Ennai poruththa mattil, 
En vayitril, 
Adhu serikkum, nandragave serikkum.  

Aanaal, 
En manadhilo, 
Sutramaay nindra nii, 
Nanbanaay serikkaamal,
Yaaro oru manidhanaay 
Urumaarivittaay...
Bhushavali
சலசலவென்ற இலைகளின் படபடப்பில், 
சிலுசிலுவென்ற காற்று.
கருகருவென்ற மேக மூட்டத்தில், 
குயில்களின் கூகூவென்ற பாட்டு.
நெடுநெடுவென்ற வேப்பமரத்தில், 
கண்ணங்கரேலென்ற காகங்களின் கூத்து.
முதுகில் முக்கோடுகள் கொண்டு, 
குடுகுடுவென்று ஓடி விளையாடும் அணில். 
திருதிருவென்று முழிக்கும் குழந்தைகளைப் பற்றும் 
அன்பிற்க்குரிய தாய்களின் பாசம். 
கிடுகிடுவென சளைக்காமல் உணவு தேடும் 
சிறுசிறு பிள்ளையார் எறும்புகள். 
கிணிகிணி என்ற மணியின் சப்தத்தோடு, 
மந்திரம் ஜபிக்கும் கோயில் குருக்கள். 
எல்லாம் இணைந்த கோவில் 
இதயத்திற்கு அமைதி சேர்க்குமாம்.


Salasalavendra ilaigalin padapadappil 
Silusiluvendra kaatru. 
Karukaruvendra mega muuttaththil, kuyilgalin 
Kuukuuvendra paattu. 
Neduneduvendra veppamaraththil, 
Kannanggarelendra kaaganggalin kuuththu. 
Mudhugil mukkodugal kondu, 
Kudukuduvendru odi vilaiyaadum anil. 
Thiruthiruvendru muzhikkum kuzhandhaigalai patrum 
Anbirkkuriya thaaygalin paasam. 
Kidukiduvena salaikkaamal unavu thedum 
Sirusiru pillaiyaar erumbugal. 
Kinikini endra maniyin sapdhaththoodu, mandhiram  
Jabikkum koyil kurukkal. 
Ellaam inaindha kovil idhayaththirku 
Amaidhi serkkumaam.
Bhushavali
என் நெஞ்சில் இலையுதிர் காலம்... 
ஒலி ஏந்திய இடங்களில் நிசப்தம்... 
தனியாக ஒரு பயணம்..??? - இல்லை 
தனிமையில் ஒரு பயணம்.  

மனத்தின் அலைகளின் அடக்கம், 
உடலின் செல்களில் குடியேறும். 
ஒவ்வொன்றாய் அது அடங்க, 
எதிர்ப்பார்ப்புகள் தானாய் அடங்கும்.  

இலைகள் உதிரத் துவங்க, 
உதிறமும் உதிர்த் துவங்க, 
துவண்டு போன மனத்தினை 
யாரும் தூக்கி நிறுத்துவோரும் உளரோ..???  

பிரிவினால் வரும் வலியைக் காட்டிலும் 
தனிமையின் வலி கொடியதடா... 
நீ இன்றி நான் இங்கு இருப்பது 
நீரின்றி மீனிருப்பதைப் போலாகுமடா...  

அனைவரும் சூழ்ந்திருக்க 
இங்கு தனிமையில் வதங்கி 
இலைகள் உதிர்ந்து, அலைகள் அடங்கி, 
வழியோடு விழி வைத்து 
உன்னை எதிர்நோக்கி நான்...


En nenjil ilaiyudhir kaalam... 
Oli endhiya idangalil nisaptham... 
Thaniyaaga oru payanam..??? - Illai 
Thanimaiyil oru payanam.  

Manaththin alaigalin adakkam, 
Udalin selgaLil kudiyeeRum. 
Ovvondraay adhu adangga, 
Edhirppaarppugal thaanaay adanggum.  

Ilaigal udhirath thuvangga, 
Udhiramum udhirth thuvangga, 
Thuvandu poona manaththinai 
Yaarum thookki niruththuvoorum uLaroo..???  

Pirivinaal varum valiyai kaattilum 
Thanimaiyin vali kodiyadhadaa... 
Nii indri naan inggu iruppadhu 
Neerindri meeniruppadhai polaagumadaa...  

Anaivarum suzhndhirukka  
Ingu thanimaiyil vadhangi 
Ilaigal udhirndhu, alaigal adangi, 
Vazhiyodu vizhi vaiththu 
Unnai edhirnokki naan...
Bhushavali
உயிரோடு உயிராகி, 
உறவாகி, 
உணர்வாகி, 
உடல்முழுதும் கசிந்துருகி....
அன்பே! 
உன்னோடு நான் வாழ 
ஒரு நொடி கிடைத்தால் போதும், 
உயிரையும் துறக்க 
ஒத்துக்கொள்வேன்...

Uyirodu uyiraagi, 
Uravaagi, 
Unarvaagi, 
Udalmuzhudhum kasindhurugi...
Anbe!
Unnodu naan vaazha 
Oru nodi kidaiththaal podhum, 
Uyiraiyum thurakka 
Oththukkolven...
Bhushavali
When death tears me apart
I am relieved, glad and happy.....
My wounds are now gone
And from my sorrows, now am free.....

I was so lost, I was in pain,
I never wanted to go through this again.....
Now I feel relieved
I leave behind every thorn that pierced my vein.....

So deep in my heart
It pierced and pricked so bad...
Now it doesn't hurt
As I go away from it all, far apart....

I was so alone, so lonely,
I felt why life had this much agony.....
Now I smile, now am free
As death embraces me finally...
Bhushavali
தேனீர் - சாயா - டீ.....
உனைத்தேடி ஒரு நெடும் பயணம்.....

கடிகாரத்தின் முட்கள் காலை மணி பதினொன்றைத் தொட,
ஏ / சி யின் ரீங்காரம் தொடர்ந்து தாலாட்ட,
கணிப்பொறியில் வேலை நிறைந்திருக்க,
விழிகளை வருடுகிறது உறக்கம்...
வழிய முயற்சித்து,
விழிகளைத் திறந்து,
மூளையை உசுப்பி,
கை / கால்களை உதறி,
சிரத்தை அசைத்து,
உறக்கத்திற்கு ஒரு பிரியா விடை...

மீண்டும்....
கடிகாரத்தின் முட்கள் மாலை மணி நான்கினைத் தொட,
ஏ / சி யின் ரீங்காரம் தொடர்ந்து தாலாட்ட,
கணிப்பொறியில் வேலை நிறைந்திருக்க,
விழிகளை வருடுகிறது உறக்கம்...
மீண்டும்....

வழிய முயற்சித்து,
விழிகளைத் திறந்து,
மூளையை உசுப்பி,
கை / கால்களை உதறி,
சிரத்தை அசைத்து,
உறக்கத்திற்கு ஒரு பிரியா விடை...


மீண்டும்...
மறுநாள் காலை கடிகாரத்தின் முட்கள் மணி பதினொன்றைத் தொட...

தினமும் தொடரும் சங்கதி...


theneer.. chaya... tea..
unaiththedi oru nedumpayanam...

kadigaarathin mutkal kaalai mani padhinondraith thoda,
a/c yin reengaram thodarndhu thaalaata,
kanipporiyil velai nirandhirukka,
vizhigalai varudugiradhu urakkam...
valiya muyarchiththu,
vizhigalaith thirandhu,
moolaiyai usuppi,
kai/kaalgalai udhari,
siraththai asaithu,
urakkaththirkku oru piriyaa vidai...

meendum,
kadigaarathin mutkal maalai mani naanginaith thoda,
a/c yin reengaram thodarndhu thaalaata,
kanipporiyil velai nirandhirukka,
vizhigalai varudugiradhu urakkam...
meendum,

valiya muyarchiththu,
vizhigalaith thirandhu,
moolaiyai usuppi,
kai/kaalgalai udhari,
siraththai asaithu,
urakkaththirkku oru piriyaa vidai...


meendum...
marunaal kaalai kadigaarathin mutkal mani padhinondraith thoda...

Dhinamum thodarum sangadhi...
Bhushavali
மற்ற இடங்களில் நூறுக்கு இரண்டு என்ற விகிதம் இருக்க...
இங்கு மட்டும் இருபத்தெட்டிற்கு நான்கு என்ற விகிதம் இருக்குமாம்...
அதாவது...,
ஏழில் ஒரு பங்கு...
நானோ...,
அந்த ஏழிலும் தொலைந்து போன
ஒரு
ஏழரை....

matra idangalil noorukku irandu endra vigidham irukka,
ingu mattum irubaththetirrkku naangu endra vigidham irukkumaam...
adhavadhu,
eazhil oru pangu...
naano,
andha ezhilum tholaindhu pona
oru
eazharai...
Bhushavali
தேவதை வம்சமாகி தேன் நிலா அம்சமாகி பூமிக்குள் ஊர்வலம் வந்த வானவில்லாகிய காலம் மலை ஏறி விட்டதடா...
இன்று நாங்கள் பாரதியின் வம்சமாகி காளியின் அம்சமாகி பூமிக்குள் ஊர்வலம் வந்த புயற்சின்னங்களாகினோம்...
சூரியன் போனதும் அங்கு வரும் நிலவல்ல நாங்கள்...
சூரியனையே சுட்டெரிக்கும் நெருப்புச் சுடர்கள் நாங்கள்...
பூக்களின் வாசமாகவும் பூங்குயிலின் பாஷையாகவும் இருந்தது அந்த காலம்....
இன்று காட்டு நெருப்பின் வாசமாகவும் கடல் கொந்தளிப்பின் பாஷையாகவும் பஞ்ச பூதங்களின் ரௌத்திர குணங்களாகவும் உங்கள் முன்னே வீற்றிருக்கிறோம்...

Devadhai Vamsammagi, thennila amsamaagi, bhoomikkul oorvalam vandha vaanavillagiya kaalam malai eri vittadhada...
Indru naangal bhaarathiyin vamsamaagi kaaliyin amsamaagi bhoomikkuloorvalam vandha puyal chinnangalaaginom..
suriyan ponadhum ange varum nilavalla naangal...
suriyanaye sutterikkum neruppu chudargal naangal...
pookalin vaasamagavum poonguyilin bhaasayagavum irundhadhu andha kaalam...
indru kaatu nerupin vaasamagavum kadal kondhalipin bhasayagavum panja boodhangalin rowdhra gunangalagavum ungal munne veetrirukkirom...
Bhushavali
ரௌத்ரம் பழகு என்றாயே...
நீ கூறியது தவறா?
நான் புரிந்து கொண்டது தவறா?
என் ரௌத்ரம்,
என்னையே அழிப்பதென்ன???
கூறடா பாரதி...

Rowdhram Pazhagu endraye...
Nee kooriyadhu thavaraa?
Naan purindhukondadhu thavaraa?
En roudhram,
Ennaye azhippadhenna???
Koorada Bharathi...


சுட்டும் விழிச்சுடர்கள் தளர்ந்து விட்டன...
வட்டக் கரியவிழிகள் சிவந்து விட்டன...
பட்டுக் கருநீலப் புடவையில் பதித்த நல் வைரங்கள் இங்கு தடங்கல்களாயின...
வெறுப்பும் வருத்தமும் குடிகொண்ட முகத்தில் சுந்தரப் புன்னகை தொலைந்து போனது...
நெஞ்சின் அலைகள், ரௌத்திர அலைகள் அடித்து ஓய்ந்தன...
குரலோ கேட்பாரின்றி தவித்தது...
குமரி என் மீது மருவக் காதல் கொண்டவன் எங்கோ தொலைவில்..
ஏனடா எனக்கு இன்னிலை,கூறடா பாரதி....

chuttum vizhichudargal thalarndhu vittana...
vattak kariyavizhikal chivandhu vittana...
pattu karuniila pudavaiyil padhiththa nal vairangkal ingu thadangalgalaayina...
veruppum varuththamum kudikonda mugaththil sundhara punnakai tholaindhu poonadhu...
nenjin alaigal, raudhdhira alaikal adiththu ooyndhana...
kuralo ketpaarindri thaviththadhu...
kumari en meedhu maruvak kaadhal kondavan enggoo tholaivil..
eenadaa enakku innilai,kuuradaa baarathi....


நல்லதோர் வீணை செய்து
அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ
என்று அன்று சிவ சக்தியிடம் கேட்டாய்....
என் சிற்றறிவு வல்லமையின்றி தொலைகிறதே
சுடர் மிகும் அறிவு கொண்ட உன் நிலை
இன்று புரிகிறது...

nalladhor viinai seydhu
adhai nalam keda puzhudhiyil erivadhundo
enru anru shiva shakthiyidam kettaay....
en chitrarivu vallmaiyindri tholaigiradhee
chudar migum arivu konda un nilai
indru purigiradhu...


ஆசை முகம் மட்டுமல்ல
எல்லாமே மறந்து போச்சு
செவிப்பறைகளுள் திட்டுகள் மட்டுமே...

aasai mugam mattumalla
ellame marandhu poochu
sevipparaigalul thittugal mattume...


பொழுது புலர்ந்தது நான் செய்த தவத்தால் தானோ?
கோர நிகழ்வுகளையும் தரிசிக்க வேண்டிய கொடுமையையும்
உடன் இழுத்து வருகிறதே ...

pozhudhu pularndhadhu naan seidha thavathaal dhaano?
kora nigazhvugalayum sandhikka vendiya kodumayayum
udan izhuthu varugiradhe...
Bhushavali
உண்மை பொய்யானதென்ன...???
பொய் நீடிப்பதென்ன..???
உன் திருவிளையாடலா..???
இல்லை, நீ அடிபட்டுவிட்டாயா...???

Unmai poyyanadhenna..???
Poi needippadhenna..???
Un thiruvilayaadalaa..???
Illai, neeye adipattuvittaayaa...???
Bhushavali
போட்டிகளில் வெல்வது சுகம்
ஆனால்,
ஓட்டப்பந்தயத்தில்
நான் காலத்தை தோற்கடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லைதான்
காலம் – என்னிடம் தோற்றதில்
அதற்கு மகிழ்ச்சி
- எல்லை கொள்ளா மகிழ்ச்சி
எனக்கோ……?
வெறுமையின் உச்சக்கட்டம்……
மனமென்னும் குரங்கின் சந்தேகங்கள் பற்பல
நான் முட்டாளா…???
காலத்தை தோற்கடிக்க முற்படுகிறேனா?
நிலைமை தொடர்ந்தால்
காலத்தை வென்று, காலனிடம் தோற்றால்…???
காலனை சிறு புல்லாய் தான் மதிக்கிறேன்
அவனை மிதிக்கிறேன்.
ஆனால்….,
மணி நேரங்கள் நிமிடமாகவும்
வருடங்கள் யுகங்களாகவும்
இருப்பதேன்…???

Potigalil velvadhu sugam
Aanal,
Otappandhayaththil
Naan kaalaththai thorkadipen endru edhirparkavillaidhan
Kaalam – Ennidam thotradhil
Adharku magizhchi
- Ellai Kolla magizhchi
Enakko……?
Verumaiyin uchchakkattam……
Manamennum Kurangin sandhegangal Parpala
Naan muttaala…???
Kaalaththai thorkadikka murpadugirena?
Nilaimai thodarndhal
Kaalaththai vendru, Kaalanidam thotral…???
Kaalanai chiru pullaai dhan madhikkiren
Avanai midhikkiren.
Aanaal….,
Mani nerangal nimidamagavum
Varudangal yugangalagavum
Iruppadhen…???

மீண்டும் பந்தயம்
பங்கேற்கலாமா…? வேண்டாமா…?
பங்கேற்காமலே இருந்து விடலாம் தான்…
காலத்தை தோற்க்கடித்து
காலனிடம் தோற்க விருப்பமில்லை…
ஆனால்…
பங்கேற்காமலே இருக்க
மனமென்னும் குரங்கு ஒத்துழைக்கவில்லையே…!!!

Meendum pandhayam
Pangerkalaamaa…? Veendama…?
Pangerkaamale irundhu vidalaam dhan…
Kaalathai thorkadithu
Kaalanidam thorka viruppamillai…
Aanal…
Pangerkaamale irukka
Manamennum kurangu oththuzhaikkavillaiye…!!!

அழகு… அளவு… காலம்…
மூன்றும் கூடினால் சுகம்
ஒன்றாயினும் பிரிந்தால் நரகம் தான்
அளவு…
காணாமல் போய்கொண்டு இருக்கிறது…
காலம்…
கண்ணுக்கெட்டும் தூரம் வரை காணவில்லை…!!!
உடலில் வலு குறைய…
கண்களில் கண்ணீர் மல்க…

பந்தயம்…
காலத்தை வெகுவாய் பின்னே தள்ளி வென்றுவிட்டேன்…
வெற்றி கண்டு விட்டேன்…

உடலில் வலு குறைய…
கண்களில் கண்ணீர் மல்க…

இதழோரம் புன்னகை

Azhagu… Alavu… Kaalam…
Moondrum koodinaal sugam
Ondrayinum pirindhal naragam dhan
Alavu…
Kaanamal poikondu irukkiradhu…
Kaalam…
Kannukettum dhooram varai kaanavillai…!!!
Udalil valu kuraiya…
Kanglil kanneer malga…

Pandhyam…
Kaalathai veguvaai pinne thalli vendruvittean…
Vetri kandu vittean…

Udalil valu kuraiya…
Kanglil kanneer malga…

Idhazhoram punnagai
Bhushavali
பொங்கி எழும் பாலை
எப்படி நிறுத்துவது…?
தணலை குறைக்கலாம் தான்.,
ஆனால் அந்த பொங்கல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதே.,
அதனை நிறுத்த வழி இல்லையா…???
தணலை அணைக்க முடியதா…???

Pongi ezhum paalai
Eppadi niruthuvadhu…?
Thanalai kuraikkalaam dhan.,
Aanaal andha pongal kattupaduthappatulathea.,
Adhanai nirutha vazhi illaiyaa…???
Thanalai anaikka mudiyadha…???

நட்பும் எதிராய்
நடப்பும் எதிராய்
பொங்கி எழுவதேன்
சினம் – அக்னிக்கடலாய்…

Natpum Edhirai
Nadappum Edhirai
Pongi ezhuvadhen
Sinam – Agnikkadalaai…

கடல் முழுதும்,
அக்னி அலைகள்…
மனம் முழுதும்,
சினத்தினலைகள்…

Kadal muzhudum, agni alaigal…
Manam muzhudum, sinathinalaigal…