Showing posts with label சமூகப் பொறுப்பு - Social Responsibility. Show all posts
Showing posts with label சமூகப் பொறுப்பு - Social Responsibility. Show all posts
Bhushavali
கண்ணோடு கண் பொறுத்தி
காதல் வார்த்தை சொன்னான்.
அப்போது புரியவில்லை –
கண் பொறுத்தியது கண்ணை அல்ல,
கல் பொறுத்திய
தங்கத்தோட்டினை என்பது!!!

Kannodu Kann Poruthi

Kadhal vaarthai sonnan.

Appodhu puriyavillai –

Kan poruthiyadhu kannai alla,

Kal poruthiya

Thanga thottinai enbadhu!!!

Bhushavali

காதலாகி கசிந்துருகி

உயிர் கலந்து

உள்ளம் நிறைந்து நிற்கும்

காதல் உள்ளங்களுக்கு,

காதலர் தினம் என்ற ஒரு நாள் எதற்கு.?!!!

அன்றொரு நாள்

ஒரு துறவி,

காதல் உள்ளங்களை இணைக்க

தன் உயிரை அற்பணித்தான்.

இன்று அவன் பெயரை

வியாபாரமாக்கிய கொடுமை என்ன..???!!!!!

Kaadhalaagi kasindhurugi

Uyir kalandhu

Ullam niraindhu nirkum

Kaadhal ullanggalukku,

kaadhalar dhinam endra oru naal edharku.?!!!

Androru naal oru thuravi,

Kaadhal ullangalai inaikka

Than uyirai arpaniththaan

Indru avan peyarai

Viyaabaaramaakkiya kodumai enna..???!!!!!

Bhushavali
நண்பன் ஒருவன் வடமொழியில் சொன்னான்.
"தந்தை சம்பாதித்த சொத்தையும்,
தான் சம்பதித்த வரதட்சணையையும்,
ஆண்டு அனுபவிக்க வேண்டும்" - என்று.
சம்பதித்த வரதட்சணையா.?
இல்லை பிச்சை எடுத்த வரதட்சணையா.???!!!

Nanban oruvan vadamozhiyil sonnaan.
"Thanthai sambaadhitha sothaiyum,
Thaan sambadiththa varadatchanaiyaiyum,
Aandu anubavikka vEndum" - endru.
Sambathiththa varadatchanaiyaa.?
Illai pichchai eduththa varadatchanaiyaa.???
Bhushavali
மீண்டும் ரயில் நிலையத்தில் சில மணித்துளிகள்.

நான் அமர்ந்த இருக்கையின் அருகில்,
இருக்கையின் மீது சாய்ந்தபடி ஒரு சிறுமி.
வயது ஐந்து இருக்கும்.
ரோஜாப்பூ வண்ணத்தில் அழகிய சொக்காய் அணிந்து
சோக்காய் நின்றிருந்தாள்.
நான் வந்ததும் சற்று தள்ளி நின்ற
தந்தையை நோக்கிச் சென்றாள்.

அப்போது தான் கவனித்தேன்.
அவளது இரு கால்களும் ஊனமாயிருப்பதை.
இருப்பினும் ஓடி ஓடி - இல்லை
விந்தி விந்தி விளையாடி,
தந்தையோடு பேசி, சிரித்து,
சிறுமிக்கான அத்தனை குணங்களுடன்
பேரழகிய குழந்தை தெய்வமாய் காட்சி தந்தாள்.
அவள் தந்தைக்கே தாயாகி நின்ற
அவளது அக்கறையை ஏனென்று சொல்வேன்.
கால் சிறுத்திருந்தும், மனம் பெருத்திருந்தது அவளுக்கு.
அவளைக் காணக் காணச் சென்று விட்டாள்
அவளது ரயில் பெட்டிக்கு.

அவள் போனதும் வந்தாள் ஒருத்தி.
மீண்டும் ஒரு ஐந்து வயது சிறுமி.
தன் சின்னஞ்சிறு பாதங்களால்
பெரிய பெரிய கட்டங்களில்
கட்டத்திற்கொரு கால் வைக்கும் முயற்சியில்.
சில இடங்களில் தாவியும்,
சில இடங்களில் ஓடியும்,
சில இடங்களில் தட்டுத்தடுமாறி
இரு பாதங்கள் வைத்தும்
நான் காணக் காண அவளும் சென்றாள்.

ஏதும் அறியா சின்னஞ்சிறு பெண் சிசுவை கொல்வதெதற்கு..???
இதயம் கரையும்
உள்ளம் உருகும்
இக்காட்சிகளை காணாமலிருப்பதற்கா.???


Meendum rayil nilaiyaththil sila maniththuligal.

Naan amarndha irukkaiyin arugil,
Irukkaiyin meedhu saayndhapadi oru sirumi.
Vayadhu aindhu irukkum.
Rojaappuu vannaththil azhagiya sokkaay anindhu
Sookkaay ninrirundhaal.
Naan vandhadhum satruu thalli nindra thanthaiyai nokki chendraal.
Appodhu dhaan kavaniththen.
AvaLadhu iru kaalgalum oonamaayiruppadhai.
Iruppinum oodi oodi - illai
Vindhi vindhi vilaiyaadi,
Thandhaiyodu pesi, siriththu,
Sirumikkaana aththanai kunangaludan
Perazhagiya kuzhandhai theyvamaay kaatchi thandhaal.
Aval thandhaikke thaayaagi nindra
Avaladhu akkaraiyai enendru solven.
Kaal siruththirundhum, manam peruththirundhadhu avalukku,
Avalai kaanak kaana chendru vittaal
Avaladhu rayil pettikku.

Aval ponadhum vandhaal oruththi.
Meendum oru aindhu vayadhu sirumi.
Than chinnanjiru paathangalaal
Periya periya kattanggalil
Kattaththirkoru kaal vaikkum muyarchiyil.
Sila idanggalil thaaviyum,
Sila idanggalil oodiyum,
Sila idanggalil thattuththadumaari
Iru paadhanggal vaiththum
Naan kaana kaana avalum chendraaL.

Edhum ariyaa chinnanjiru pen sisuvai kolvadhedharku..???
Idhayam karaiyum
Ullam urugum
Ikkaatchigalai kaanaamaliruppadharkaa.???
Bhushavali
சென்னை மாநகரப் பேருந்து. 
அரிது அரிது அப்பேருந்தில் அமர இடம் கிடத்தல் அரிது. 
இருப்பினும் அன்று கிடைத்தது... 

சில நிமிடஙளில் செவிகளில் நிறைந்தது, 
சிறு பிள்ளையின் அரைக்கூவல் 
அங்கு நோக்கினால், 
விழிகளில் நீர் நிரைந்து அழுதபடி, 
ஒரு செண்பகமலர்.. 
அந்த செங்காந்தள் மங்கைக்கோ, 
நெரிசலில் செண்பகமலருடன் ஒரு போராட்டம்.. 

சற்று நேரத்தில், மூதாட்டி ஒருத்தி,
தள்ளாத வயதில் மக்கள் தோளின்றி
தனியெ ஒரு போராட்டம்... 

என் மனதிலோ, 
அதனினும் பெரிய போரட்டம், 
நான் எழுந்து இடம் தரவா.? 
இல்லை நெஞ்சைப் பிடித்தபடி அமர்ந்திருக்கவா.? 

எழுந்து இடம் தராவிட்டால் நான் கல் நெஞ்சக்காரியா.? 
எழுந்து இடம் தந்தால், 
நான் ஜனத்தொகை பெருக்கதிற்கு வழி கோல்கிறேனா.? 
பெற்ற தாயை கவனிக்கத் தவறிய மாக்களுக்கு தோள் கொடுக்கிறேனா.? 

தினம் தினம் மனதில் கேள்விக்குறி....

Chennai maanagarap peerundhu.

Aridhu aridhu apperundhil amara idam kidaiththal aridhu.

Iruppinum andru kidaithadhu...


Sila nimidangalil sevigalil niraindhadhu,

Siru pillaiyin araikuuval

Angu nokkinaal,

Vizhigalil niir niraindhu azhudhapadi,

Oru chenbagamalar..

Andha sengandhal mangaiko,

Nerisalil chenbagamalarudan oru porattam..


Satru neeraththil, Moodhaatti oruththi,

Thallaadha vayadhil makkal tholindri,

Thaniye oru poraattam...


En manadhiloo, adhaninum periya porattam,

Naan ezhundhu idam tharavaa.?

Illai nenjchai pidithapadi amarndhirukkavaa.?

Ezhundhu idam tharaavittaal naan kal nenjchakkaariyaa.?

Ezhundhu idam thandhaal,

Naan janaththogai perukkathirku vazhi koolgirenaa.?

Petra thaayai gavanikkath thavariya maakkalukku thol kodukkirenaa.?

Dhinam dhinam manadhil kelvikkuri....

Bhushavali
எனது முதல் முயற்சியான இதனை வெளியிட்ட கோகுலம் (ஜனவரி 2003)இதழிற்கு நன்றி...
Thank You Gokulam Magazine (Jan 2003)for publishing this first effort of mine..

அவசரமான வேலை,
பஸ் கிடைக்கவில்லை,
நடக்கத் தொடங்கினேன்.
லதா ஒரு பேனா கேட்டாளே
கடைக்குள் நுழைந்தேன்...

வந்தான் ஒரு சிறுவன்
பங்கஜம்மாளின் பேரன்
வாங்கினான் ஒரு கோகோ கோலா
பேரம் பேச வில்லையே.
நேற்று பங்கஜம்மாள்
கீரைக்காரியிடம், மூன்று ரூபாய் கீரைக் கட்டை
இரண்டரை ரூபாய்க்கு பேரம் பேசினாளே!
சிரித்துக்கொண்டேன்...

சிறுவயதில்,
பனை ஓலையில் காற்றாடி செய்து
பூவரச இலையில் ஊதல் செய்து
விளையாடினோமே!
ம்! இன்று
அந்த ஆக்கத்தை, ஏப்பம் விட்டு விட்டதா,
இந்தக் கடையில் உள்ள பார்பி பொம்மைகள்?

60 வயது கிழவனும் தன்
80 வயது தாயைக் காப்பாற்றும் இந்நாட்டில்,
அன்னையர் தினம் எந்நாளும்...
அதற்கெதற்கு ஒரு நாள் கொண்டாட்டம்,?
அதற்கேன் வாழ்த்தட்டை.?
அதை ஏன் வாங்கினாள் டீனா.?
தொடர்ந்தேன்.

வழியில் டீ.வீ கடை,
வாசலில் இளைஞர்கள் கும்பல்.
இந்தியா பாகிஸ்தான் இறுதி ஆட்டமாம்...
படிக்கும் வயதில் விளையாடலாம்,
தலைவனாகக் கனவு கானலாம்,
அடிமையாகலாமா.?
அதுவும் கிரிகெட்டிற்கு.?

சிறிது தூரத்தில் ஒரு குயவன்
குடை பிடித்திருந்தான்,பனை ஓலையால்...
பக்கத்துக் கடையில் கொத்துக் கொத்தாய்,
திராட்சை அல்ல,
பிளாஸ்டிக் குடங்கள்...

நடந்ததால் கால் வலித்தது,
ஆனால் உண்மை புரிந்தது,
என் அவசர வேலையினும்
அவசரத் தேவை,
உலகமயமாக்கல் எதிர்ப்பு...!!!

Avasaramaana velai
Bus kidaikkavillai,
Nadakkath thuvanginen,
Latha oru pena kettale,
Kadaikkul nuzhaindhen.
Vandhaan oru siruvan,
Pankajammalin peran,
Vaanginaan oru Cococola,
Beram peasavillaye,
Netru, Pankajammal,
Keeraikkaariyidam moondru roobaai keeraikkattai
Irandarai roobaaikku beram pesinaale,
Siriththukkonden...!

Siruvayadhil,
Panai olaiyil kaatraadi seidhu,
Poovarasa ilaiyil oodhal seidhu,
Vilaiyaadinome,
M! Indru
Andha aakkaththai eppam vittu vittadha
Indhakk kadayilulla Barbie bommaigal.?

60 vayadhu kizhavanum than
80 vayadhu thaayai kaappatrum innattil
Annayar dhinam ennalum
Adharkedharkku oru naal kondaatam?
Adharkken vaazhthattai?
Adhai yen vaanginaal Tina.?

Thodarndhen
Vazhiyil t.v. kadai,
Vaasalil ilainyargal gumbal
India Pakistan irudhi aatamaam..
Padikkum vayadhil vilayaadalam,
Thalaivanaaga kanavu kaanalaam,
Adimayaagalaama,
Adhuvum Cricketirkku.?

Siridhu dhoorathil oru kuyavan,
Kudai pidiththirundhaan,
Panai olayaal.
Pakkathuk kadayil kothukoththaai,
Thratchai alla,
Plastic kudangal...

Nadandhadhaal, kvaliththadhu,
Aanal unmai purindhadhu.
En avasara velayinum,
Avasaraththevai,
Ulagamayamaakkal edhirppu...
Bhushavali
காலை எழுந்ததும் - பற்குச்சி பற்பசை...
பிறகு - சோப்பு, சோப்பு குப்பி,
தலைக் குளியலுக்கு ஷாம்பூ, அதற்கென்று ஒரு குப்பி..
பள்ளிப் பருவத்தில் -
தண்ணீர் குப்பி, உணவுப் பெட்டி, பேனா, புத்தக உரை...
கல்லூரி காலமோ கஷ்ட காலம் -
அழகு சாதனப் பொருட்கள், வாசம் மணக்கும் சென்ட்டுகள், பத்து வகைச் செருப்புகள், இருபது வகை அணிகலன்கள்...
வேலைக்கு வந்த பின் -
இரண்டு / நான்கு சக்கர வாகனம், மொபைல், லேப்டாப்...
இவை அனைத்துமே பிளாஸ்டிக்கில் இருக்கையில்,
எங்கே தம்பி போனது - இயற்க்கை சார்ந்த வாழ்வு...?????


Kaalai ezhundhadhum - Parkkuchchi, parppasai...
Piragu - Soap, soapu kuppi,
thalaikkuliyalukku shampoo, adharkkendru oru kuppi...
Pallip paruvaththil -
Thanneer kuppi, unavup petti, pena, puththaga urai...
Kalloorik kaalamo kashta kaalam -
azhagu saadhanap porutkal, vaasam manakkum senttugal, paththu vagai seruppugal, irubhadhu vagai anigalangal...
Velaikku vandhapin -
Irandu / Naangu chakkara vaaganam, mobile, laptop...
ivai anaiththum plastikkil irukkayyil,
enge thambi ponadhu - iyarkkai saarndha vaazhvu...?????
Bhushavali
சாதிகள் இல்லையடி பாப்பா என்று
அன்றோருவன் கூறினான்...
இன்றும் இருக்கிறதே...-----
என் செய்வேன் நண்பா...???
சாதியை நான் மறந்துதான் போய்விட்டேன் போலும்,
நீ வந்து நினைவு படுத்துகிறாய்...
மனதை வதைக்கவும் செய்கிறாய்...

அதி முக்கிய தேவைகளிலேயே ஹிம்சிக்கத் துவங்கிவிட்டாய்...
உணவு முறைகளை உனக்காக மாற்றிக் கொண்டு விட்டேன்...
எனக்கெதிரே நீ அமர்ந்து முழு ஆட்டையோ மாட்டாயோ உண்டாலும்
எனக்கது அருவருப்பாக இல்லை...
அது என் தட்டில் இல்லாதவரையில்...

ஆனால்,
நீ கேட்கிறாய்...
"நா துடிக்கிறதா...??? ஒரு துளி வேண்டுமா...???" என்று...
உனக்காக நான் சகித்துக் கொள்கிறேனே-
எனக்காக நீ சொற்களால் சாடாமல் இருப்பாயா...???

நண்பா,
இன்றும் உன்னிடம் நான் இதைக் கூறவில்லை...
உன் மனம் நோகுமே என்று...

நண்பா,
உன் நட்பு எனக்கு என்றென்றும் வேண்டும்...
நம் வேறுபாடுகளை மதிப்போம் வா...
உன் இஷ்டம் போல் நீ இருந்துக் கொள்...
என் இயற்கை உணர்ந்து என்னை வாழ விடு...

Saathigal inllayaldi paappa endru,
Androruvan koorinaan...
Indrum irukkiradhe.---
En seiven nanbha..???
Saathiyai naan marandhu poiveiten polum,
Nee vandhu ninaivu paduthugiraai...
Manadhai vadhaikkavum seigiraai...
Adhi mukkiyaththevaigalileye himsikka thuvangivittaai..
Unavu muraigalai unakkaaga maatrikkondu vitten...
Enakkedhire nee amarndhu muzhu aataiyo maataiyo undaalum
Enakkadhu aruvaruppaaga illai
Adhu en thattil illadha varayil...
Aanaal,
Nee ketkiraai...
"Naa thudikkiradhaa..??? Oru thuli vendumaa..???" endru...
Unakkaaga naan sagiththukkolgirene,
Enakkaga nee sorkkalaal saadamal iruppayaa...???
Nanba,
Indrum unnidam naan idhai kooravillai...
Un manam nogume endru...
Nanba,
Un natpu enakku endrendrum vendum...
Nam verupaadugalai madhippom vaa...
Un ishtam pol nee irundhu kol...
என் iyarkkai unarndhu ennai vaazha vidu...


மீண்டும் அதே கேள்விகள்....
நெஞ்சில் நிதம் வேள்விகள்...
தினம் தினம் கேட்கிறாய்...
சிக்கனா..???? மட்டனா..????
இஷ்டப்படி கூறுகிறேன்...
நேற்று நாய்க்கறி என்றேன்...
இன்று பாம்புக்கறி என்பேன்...
நாளை எலிக்கறி எனலாம்....
சிரிப்போடு சிரிப்பாய் கலந்தாலும்,
நெஞ்சில் ஆழப் பாய்கிறது உன் சொல்...

Meendum adhe kelvigal...
Nenjil nidham velvigal...
Dhinam dhinam ketkiraai...
Chicken'a...??? Mutton'a...???
Ishtappadi koorugiren...
Netru naaikkari endren...
Indru paambukkari enben...
Naalai elikkari enalaam...
Sirippodu sirippai kalandhaalum,
Nenjil aazhappaaigiradhu un sol...