Bhushavali
தல LK அவர்கள் எடுத்துக்கொண்ட ஒரு சவால். என் சிறு முயற்சி...
A Challenge taken by Thala LK, a little trial from my side...


நான் இறந்து போயிருந்தேன்
அந்த கடவுள் என்னை நோக்கும் வரையில்

அந்த பயங்கர பூகம்பத்தில்,
சின்னாபின்னமான என் வீட்டின்
சிதிலங்களுக்கு நடுவில்
நான்கு நாட்கள்
நான் இறந்துதான் போயிருந்தேன்
கடவுள் ரூபத்தில்
அந்த வீரன் என்னை தூக்கும் வரையில்
இன்று -
அந்த மனித உருக்கொண்ட கடவுளால்
ஒரு மறுபிறவி கொண்டேன்!!!

Naan irandhu poyirundhen
Andha kadavul ennai nokkum varaiyil
Andha bayangara boogambathil,
Chinnabinnamana en veetin
Sithilangalukku naduvil
Naangu naatkal
Naan irandhudhaan poyirundhen
Kadavul roobathil
Andha veeran ennai thookum varaiyil
Indru -
Andha manidha urukkonda kadavulal
Oru marupiravi konden!!!
Bhushavali
நீ இல்லாமல் நான்கு நாட்கள்
மூன்று நாட்களை ஒரு வழியாக தாட்டிவிட்டேன்
நான்காம் நாள்
வயிறு பிசைந்தது…
நெஞ்சு வலித்தது…
மூளை கிட்டத்தட்ட செயலிழந்தது…
கண்கள் உன்னைத் தேடின…
உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது…
நிலை குலைந்திருக்கும் நான்,
உன் குரல் கேட்டால் -
நிலை தெளிவேன்...

Nee illamal naangu naatkal

Moondru naatkalai oru vazhiyaaga thaattivitten

Naangam naal

Vayiru pisaindhadhu…

Nenju valithadhu…

Moolai kittathatta seyalizhandhadhu…

Kangal unnai thedina…

Uyir oosaladikkondirukkiradhu…

Nilai kulaindhirukkum naan,

Un kural kettal -

Nilai theliven

Bhushavali
கண்ணோடு கண் பொறுத்தி
காதல் வார்த்தை சொன்னான்.
அப்போது புரியவில்லை –
கண் பொறுத்தியது கண்ணை அல்ல,
கல் பொறுத்திய
தங்கத்தோட்டினை என்பது!!!

Kannodu Kann Poruthi

Kadhal vaarthai sonnan.

Appodhu puriyavillai –

Kan poruthiyadhu kannai alla,

Kal poruthiya

Thanga thottinai enbadhu!!!

Bhushavali
When some question are un-warrantedly asked,
When a moment wrongly hanppens,
When some answers had to be given,
When some results turn haywire,
When some people do not see you correctly,
When the question is 'What did you do'.?
When you are hurt by all around you,
When you want to cry your heart out,
When you are not recognized for what you are,
When even the pen you write stops working,
What do you do.?????
Bhushavali

காதலாகி கசிந்துருகி

உயிர் கலந்து

உள்ளம் நிறைந்து நிற்கும்

காதல் உள்ளங்களுக்கு,

காதலர் தினம் என்ற ஒரு நாள் எதற்கு.?!!!

அன்றொரு நாள்

ஒரு துறவி,

காதல் உள்ளங்களை இணைக்க

தன் உயிரை அற்பணித்தான்.

இன்று அவன் பெயரை

வியாபாரமாக்கிய கொடுமை என்ன..???!!!!!

Kaadhalaagi kasindhurugi

Uyir kalandhu

Ullam niraindhu nirkum

Kaadhal ullanggalukku,

kaadhalar dhinam endra oru naal edharku.?!!!

Androru naal oru thuravi,

Kaadhal ullangalai inaikka

Than uyirai arpaniththaan

Indru avan peyarai

Viyaabaaramaakkiya kodumai enna..???!!!!!

Bhushavali
என் வழியில் நான் நடக்க,
தடத்திலொரு விரல் இருக்க,
அதிர்ந்தேன்.
நெஞ்சம் கனத்தது.
நேற்று வரை ஓடி விளையாடி,
இரை தேடிய,
கோழி ஒன்று,
இன்று, பிணமாகி
வேறொருவனுக்கு உணவாகி
தன் விரலை நகத்தோடு,
நடுத்தெருவில் தொலைத்ததோ.???

En vazhiyil naan nadakka,
Thadaththiloru viral irukka,
Adhirnthen.
Nenjam ganaththadhu.
Netru varai Odi vilaiyaadi,
Irai thediya,
Koozhi ondru,
Indru, pinamaagi
Veroruvanukku unavaagi
Than viralai nagaththodu,
Naduththeruvil tholaiththadho.???
Bhushavali
நண்பன் ஒருவன் வடமொழியில் சொன்னான்.
"தந்தை சம்பாதித்த சொத்தையும்,
தான் சம்பதித்த வரதட்சணையையும்,
ஆண்டு அனுபவிக்க வேண்டும்" - என்று.
சம்பதித்த வரதட்சணையா.?
இல்லை பிச்சை எடுத்த வரதட்சணையா.???!!!

Nanban oruvan vadamozhiyil sonnaan.
"Thanthai sambaadhitha sothaiyum,
Thaan sambadiththa varadatchanaiyaiyum,
Aandu anubavikka vEndum" - endru.
Sambathiththa varadatchanaiyaa.?
Illai pichchai eduththa varadatchanaiyaa.???
Bhushavali
உன்னால் தொலைத்த ரௌத்திரத்தை
உன் பிரிவால் மீண்டும் கண்டெடுத்தேன்.
இது நன்மையோ தீமையோ நானறியேன்.

இதோ இந்நொடியில்
ரௌத்திரம் மேலோங்கிட
செவிகளில் ரௌத்திர சப்தங்கள் ஒலிக்க
கைகளில் ரௌத்திரமேற்றும் ருத்திராட்சங்கள் இருக்க
அருகில் தண்டால் எடுக்கும் உபகரணங்களுடன்
கண்டெடுத்த ரௌத்திரம் விழிகளில் மின்ன
அனல் மூச்சுடன் அமர்ந்திருக்கிறேன்.


Unnaal tholaiththa rauthirathai
Un pirivaal mindum kandeduththen.
Idhu nanmaiyo thiimaiyo naanariyen.

Idho innodiyil
Rauthiram melonggida
Sevigalil rauthira sapthanggal olikka
Kaigalil rowthirametrum ruththiraatchanggal irukka
Arugil thandaal edukkum upagaranangaludan
kandeduththa rauthiram vizhigalil minna
Anal moochudan amarndhirukkiren.
Bhushavali
மீண்டும் ரயில் நிலையத்தில் சில மணித்துளிகள்.

நான் அமர்ந்த இருக்கையின் அருகில்,
இருக்கையின் மீது சாய்ந்தபடி ஒரு சிறுமி.
வயது ஐந்து இருக்கும்.
ரோஜாப்பூ வண்ணத்தில் அழகிய சொக்காய் அணிந்து
சோக்காய் நின்றிருந்தாள்.
நான் வந்ததும் சற்று தள்ளி நின்ற
தந்தையை நோக்கிச் சென்றாள்.

அப்போது தான் கவனித்தேன்.
அவளது இரு கால்களும் ஊனமாயிருப்பதை.
இருப்பினும் ஓடி ஓடி - இல்லை
விந்தி விந்தி விளையாடி,
தந்தையோடு பேசி, சிரித்து,
சிறுமிக்கான அத்தனை குணங்களுடன்
பேரழகிய குழந்தை தெய்வமாய் காட்சி தந்தாள்.
அவள் தந்தைக்கே தாயாகி நின்ற
அவளது அக்கறையை ஏனென்று சொல்வேன்.
கால் சிறுத்திருந்தும், மனம் பெருத்திருந்தது அவளுக்கு.
அவளைக் காணக் காணச் சென்று விட்டாள்
அவளது ரயில் பெட்டிக்கு.

அவள் போனதும் வந்தாள் ஒருத்தி.
மீண்டும் ஒரு ஐந்து வயது சிறுமி.
தன் சின்னஞ்சிறு பாதங்களால்
பெரிய பெரிய கட்டங்களில்
கட்டத்திற்கொரு கால் வைக்கும் முயற்சியில்.
சில இடங்களில் தாவியும்,
சில இடங்களில் ஓடியும்,
சில இடங்களில் தட்டுத்தடுமாறி
இரு பாதங்கள் வைத்தும்
நான் காணக் காண அவளும் சென்றாள்.

ஏதும் அறியா சின்னஞ்சிறு பெண் சிசுவை கொல்வதெதற்கு..???
இதயம் கரையும்
உள்ளம் உருகும்
இக்காட்சிகளை காணாமலிருப்பதற்கா.???


Meendum rayil nilaiyaththil sila maniththuligal.

Naan amarndha irukkaiyin arugil,
Irukkaiyin meedhu saayndhapadi oru sirumi.
Vayadhu aindhu irukkum.
Rojaappuu vannaththil azhagiya sokkaay anindhu
Sookkaay ninrirundhaal.
Naan vandhadhum satruu thalli nindra thanthaiyai nokki chendraal.
Appodhu dhaan kavaniththen.
AvaLadhu iru kaalgalum oonamaayiruppadhai.
Iruppinum oodi oodi - illai
Vindhi vindhi vilaiyaadi,
Thandhaiyodu pesi, siriththu,
Sirumikkaana aththanai kunangaludan
Perazhagiya kuzhandhai theyvamaay kaatchi thandhaal.
Aval thandhaikke thaayaagi nindra
Avaladhu akkaraiyai enendru solven.
Kaal siruththirundhum, manam peruththirundhadhu avalukku,
Avalai kaanak kaana chendru vittaal
Avaladhu rayil pettikku.

Aval ponadhum vandhaal oruththi.
Meendum oru aindhu vayadhu sirumi.
Than chinnanjiru paathangalaal
Periya periya kattanggalil
Kattaththirkoru kaal vaikkum muyarchiyil.
Sila idanggalil thaaviyum,
Sila idanggalil oodiyum,
Sila idanggalil thattuththadumaari
Iru paadhanggal vaiththum
Naan kaana kaana avalum chendraaL.

Edhum ariyaa chinnanjiru pen sisuvai kolvadhedharku..???
Idhayam karaiyum
Ullam urugum
Ikkaatchigalai kaanaamaliruppadharkaa.???
Bhushavali
உன் கைகளால் 
என் கால்களைப் பற்றி 
தலைகீழாய் தொங்க விட்டிருக்கிறாய். 
என் உடலில் இன்னும் உயிர் இருக்கிறது. 
இதுதான் என் கடைசி நிமிடம் என்பதை நான் அறிவேன்.  

விழிகளில் நீர் வற்றி, 
மனத்தில் வாழும் எண்ணம் வற்றி, 
இதோ 
என் மனத்திரையில் என் வாழ்வின் காலச்சக்கரம்; 
என் விழித்திரையில் காலனின் சிரிப்பு. 

உன் முகத்தில் சிறு சலனமும் இல்லை; 
வாடிக்கையாளர் முகத்தில் உணவின் திருப்தி; 
என் முகத்திலோ காலனைக் கண்ட பயம்.  

உனக்காகவே பற்பல செடிகொடிகள் இருக்க 
நீ ஏன் என்னை உண்ண விரும்புகிறாய்.? 
கொலை செய்வதில் உனக்கு அவ்வளவு விருப்பமா.?
பிணத்தை உண்ண உனக்கு அவ்வளவு விருப்பமா.?


Un kaikalaal En kaalkalaip patri 
Thalaikiizhaay thongga vittirukkiraay. 
En udalil innum uyir irukkiradhu. 
Idhudhaan en kadaisi nimidam enbadhai naan ariven.  

Vizhigalil niir vatri, 
Manaththil vaazhum ennam vatri, 
Idhoo 
En manaththiraiyil en vaazhvin kaalachchakkaram; 
En vizhiththiraiyil kaalanin sirippu.  

Un mugaththil siru salanamum illai; 
VaadikkaiyaaLar mugaththil unavin thirupthi; 
En mugaththilo kaalanai kanda bayam.  

Unakkaagave parpala chedikodigal irukka 
Nii yen ennai unna virumbukiraay.? 
Kolai seyvadhil unakku avvalavu viruppamaa.? 
Pinaththai unna unakku avvalavu viruppamaa.?
Bhushavali
வாழ்க்கையில் பற்பல நிகழ்ச்சிகள்... 
நவரசமும் ஒவ்வொன்றாய், 
ஒவ்வொரு நொடியும் எட்டிப்பார்க்கும்...  

என் வாழ்க்கை கலந்திருந்தாலும், 
சிரிப்பிற்கு, 
அழகிய உவமையாய் நின்ற 
அந்நிகழ்ச்சியை, 
நண்பனாய் நின்ற உன்னிடம், 
உன்னை நம்பிக் கூறினேன். 
இதை சிரிப்போடு சிரிப்பாய் 
நீ எவரிடமும் கூறினாலும், 
என் பெயரை கூறமாட்டாய் 
என்ற நம்பிக்கையில்...  

அந்த நம்பிக்கையை ஏன் சீரழித்து 
சின்னாபின்னமாக்கினாய்...??? 
என் பெயரை ஏன் மொழிந்த்தாய்...??? 
என் மன உளைச்சலை,
நீ இப்போதெப்படி களைவாய்..?????


Vaazhkkaiyil parpala nigazhchchigal... 
Navarasamum ovvondraay, 
Ovvoru nodiyum ettippaarkkum...  

En vaazhkkai kalandhirundhaalum, 
Sirippirku, 
Azhagiya uvamaiyaay nindra 
Annigazhchchiyai, 
Nanbanaay nindra unnidam, 
Unnai nambi kurinen. 
Idhai sirippodu sirippaay nii 
Evaridamum kuurinaalum, 
En peyarai kuuramaattaay  
Endra nambikkaiyil...  

Andha nambikkaiyai een siirazhiththu 
Chinnaabinnamaakkinaay...??? 
En peyarai een mozhindhaay...??? 
En mana ulaichchalai, 
Nii ippodheppadi kalaivaay..?????
Bhushavali
உன் குலம் தான் இதுவாயிற்றே, உனக்கென்ன.? 
உன் தந்தை தான் இவராயிற்றே, உனக்கென்ன.? 
உன் தாய் தான் இவராயிற்றே, உனக்கென்ன.? 
உன் வீடு தான் இங்கிருக்கிறதே, உனக்கென்ன.? 
உன் சம்பளம் தான் இவ்வளவாயிற்றே, உனக்கென்ன.?  

நீ கேட்ட இந்த கேள்விகள் அனைத்தையும், 
மனத்தின் ஆழத்தில் தள்ளி பூட்டி விட்டேன். 
இதழோரம் புன்னகை பூத்து விட்டேன்.  

இன்றோ நீ, 
உனக்கு தான் தினமும் நல்ல உணவு கிடைக்கிறதே.? 
உன் உணவு தான் சத்தானதாயிற்றே.? 
இப்படியும் உன்னிடமிருந்து கேள்விகள்.  

இதை ஒரு உணவற்ற ஏழை கேட்டிருந்தால், 
எண்ணங்கள் வெறு திசை சென்றிருக்கும். 
நீ ஏன் கேட்டாய்.?  

மனிதா,
'உணவுக்குக் கூட கண் வைத்தால் 
அது செரிக்குமா.?' - என சிலர் கேட்பர். 
என்னைப் பொருத்த மட்டில், 
என் வயிற்றில், 
அது செரிக்கும், நன்றாகவே செரிக்கும்.  

ஆனால், 
என் மனதிலோ, 
சுற்றமாய் நின்ற நீ, 
நண்பனாய் செரிக்காமல், 
யாரோ ஒரு மனிதனாய் 
உருமாறிவிட்டாய்...


Un kulam dhaan idhuvaayitre, unakkenna.? 
Un thandhai dhaan ivaraayitre, unakkenna.? 
Un thaay dhaan ivaraayitre, unakkenna.? 
Un veedu dhaan ingirukkiradhe, unakkenna.? 
Un sambalam dhaan ivvalavaayitre, unakkenna.?  

Nii ketta indha keelvigaL anaiththaiyum, 
Manathin aazhaththil thalli pootti vitten. 
Idhazhoram punnagai pooththu vitten.  

Indro nii, 
Unakku dhaan dhinamum nalla unavu kidaikkiradhee.? 
Un unavu dhaan saththaanadhaayire.?
Ippadiyum unnidamirundhu kelvigal.  

Idhai oru unavatra ezhai kettirundhaal, 
EnnanggaL veru dhisai sendrirukkum. 
Nii en kettaay.?  

Manidhaa, 
'Unavukku kooda kan vaithaal 
Adhu serikkumaa.?' - ena silar ketpar. 
Ennai poruththa mattil, 
En vayitril, 
Adhu serikkum, nandragave serikkum.  

Aanaal, 
En manadhilo, 
Sutramaay nindra nii, 
Nanbanaay serikkaamal,
Yaaro oru manidhanaay 
Urumaarivittaay...